ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் சார்பாக ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வீட்டில் உபயோகம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னால் நகர்மன்ற உறுபினர் மற்றும் தெற்குத்தெரு ஜாமாத் முன்னால் செயலாளர் லாஹிதுகான் , முன்னால் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆனா மூனா காதர் சாகிப் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நெய்னா அசாருதீன் ஹபீப் மரைக்கா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் தலைவர் ஜாஃபர் ஜலாலுதீன் நன்றி தெரிவித்தார்.
Category:
மனிதநேயம்
பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சார்ந்த ராஜேஸ் என்பவர், தலஸ்லீமா எனும் ரத்த பற்றாகுறை நோயின் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்தவமனையில் சேர்ந்துள்ளார். ஆனால் அவருடைய தந்தை பல நபர்களிடம் முயற்சி செய்தும் அவருக்இகு தேவையான ரத்த வகை கிடைக்கவில்லை.
இந்நிலையில் ராஜேசின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்து வருவதை கண்டு அம்மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவர் அப்பகுதியில் உள்ள மாவட்ட ரத்த தான அமைப்பைச் சார்ந்த ஹுசைன் என்பவரிடம் தெரிவித்துள்ளார், உடனே அந்நபரும் அதே வகை ரத்தம் உடைய தன் நணபர் ஜாவத் என்பவரிடம் விபரத்தை கூறி மருத்துவமனைக்கு வரவழைத்துள்ளார்.
ஆனால் மருத்துவர்களோ ஜாவித் நோன்பு நோற்பதால் இரத்தம் எடுக்க முடியாது என மறுத்துவிட்டனர், ஜாவித் மருத்துவரகளிடம் எவ்வளவோ விளக்கம் கூறியும் கேட்கவில்லை, உடனே ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக நோன்பை துறந்து விட்டு, இரத்த தானம் அளித்து உயிருக்கு போராடிய அந்நபரை காப்பாற்றியுள்ளார்.
இது பற்றி ஜாவத் கூறுகையில், “எங்களுடைய மார்க்கம் மனித நேயத்தை போதிக்க கூடிய மார்க்கம், என் கண் முன்னால் உயிருக்கு ஆபத்து உண்டாவதை சகித்து கொள்ள முடியாது, ஆகையால் இவ்வாறு செய்தேன்” என கூறி அனைவரையும, நெகிழ வைத்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீட் தேர்வு – அகதிகளாக்கப்பட்ட தமிழ் மாணவர்கள், வஞ்சிக்கும் ஆட்சியாளர்கள்…சாமானியனின் வேதனை பார்வை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தொலை தூர நகரங்களுக்கு..
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு.. அவசர உதவி எண்கள் அறிவிக்கப்படுள்ளன..
அவர்கள் ஒன்றும் ஆழிப்பேரலையால்
சூழ்ந்து கொள்ளப்பட்டிருக்கவில்லை.:..
அவர்களுக்கு
பயண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது..
அவர்கள் கடும் புயலில்
காணாமல் போய்விடவில்லை..
அவர்களுக்கு உதவத் தயார் என்று
கருணைக் கரங்கள் நீட்டப்படுகின்றன..
அவர்கள் பூகம்பங்களில் இடுபாடுகளில்
சிக்கிக்கொண்டிருக்கவில்லை..
அவர்களுக்கு
காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவிருக்கிறது
அவர்கள்
ஒரு கலவரத்தில் சிதறடிக்கபட்டவர்கள் அல்ல..
அவர்களுக்கு
தங்குமிடம் தர யாரோ
அன்புக் கரம் நீட்டுகிறார்கள்…
அவர்கள் நகரங்கள்
தண்ணீரில் மூழ்கிப்போய்விடவில்லை …
அவர்களுக்கு உணவளிக்கத்தயார் என்று
யாரோ வாக்குறுதி அளிக்கிறார்கள்…
அவர்கள் அகதி முகாம்களைத்தேடி
நடந்துகொண்டிருக்கவில்லை …
அவர்கள் வெறுமனே
ஒரு தேர்வை எழுத விரும்புகிறார்கள்….
அதற்காக நாம் ஏன்
அகதிகளாக மாற்றப்படுகிறோம் என்பதை
அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை…
இதற்கு முன்னும் அவர்கள்
ஒரு தேர்வை எழுத நிர்பந்திக்கப்பட்டார்கள்
மூச்சுத்திணறினார்கள்…
ஒரு இளம்பெண்
தன் கழுத்தில்
ஒரு தூக்குக் கயிறை மாட்டிக்கொண்டு
அந்த மூச்சுத்திணறலிருந்து விடுபட்டாள்…
இதற்கு முன்னும் அவர்கள்
ஒரு தேர்வை எழுத வந்தார்கள்..
அவர்கள் உள்ளாடைகள் அவிழக்கப்பட்டன..
கீழே கொட்டபட்ட கைப்பைகளிலிருந்து
சானிடரி நாப்கின்கள் சிதறி விழுந்தன
உள்ளாடைகளை கண்ணீருடன் அணிந்து கொண்டு நாப்கின்களை பொறுக்கிகொண்டு
அவர்கள் தேர்வை எழுதினார்கள்..
இதற்கு முன்னும் அவர்கள் ஒரு தேர்வை எழுதினார்கள் கடினமான கேள்வித்தாள்களின் பாறைகளில்
அவர்கள் தங்கள் தலையைமுட்டி கொண்டனர்..
தோல்வியடைந்து மெளனமாக வீடு திரும்பினார்கள்..
இப்போது அவர்கள்
ஒரு தேர்வை எழுத நெடுந்தூரம் செல்ல
நிர்பந்திக்கபட்டிருக்கிறார்கள்…
ரயில் பெட்டிககளின் ஜன்னலோரங்களில் அமர்ந்து இரவெல்லாம் இருளையே
தூங்காமல் வெறித்துப் பார்த்துகொண்டிருக்கிறார்கள்..
அவர்களுக்கு அவசர உதவி எண்கள் தரப்பட்டிருக்கின்றன..
அவர்களுக்கு கருணைக் கரம் நீட்டுபவர்கள் இருக்கிறார்கள்..
அவர்கள் வெறுமனே ஒரு தேர்வை எழுதத்தான் விரும்பினார்கள்…
அவர்கள் போர்முனைக்குச் செல்வதுபோல
பெற்றோர்கள் பதட்டத்துடன்
அவர்களை வழியனுப்புகிறார்கள்….
’நீ போகத்தான் வேண்டுமா?’ என்று
ஒரு அன்னை தன் மகளின் கைகளை பற்றிக்கொண்டு கேட்கிறாள்…
அவர்கள் வெறுமனே ஒரு தேர்வைத்தான் எழுத விரும்பினார்கள்…
நாம் ஏன் எப்போதும்
எதற்காகவாவது மன்றாடியபடி
தெருக்களில் நின்றுகொண்டிருக்கிறோம்?..
நாம் ஏன் நம் எளிய உரிமைகளுக்காக
இத்தனை உரத்த குரலில் பேச நிர்பந்திக்கபடுகிறோம்? …
ஒரு இனம் பிற இனங்களைபோல வாழ
ஏன் இத்தனை தியாகங்களை நோக்கி செலுத்தப்படுகிறது? …
நாம் வேட்டையாடப்படுகிறோம்
சிறு முயல்களைபோல…
சிறு எலிகளைப்போல…
சிறு எறும்புகள் போல..
நாம் எதையாவது கேட்டு கத்துவதைக் கண்டு
சிலர் ஆர்கஸம் அடைகிறார்கள்…
சிலரது மதுகோப்பைகளில் நமது கோபம்
ஒரு ஐஸ் துண்டைப்போல விழுகிறது…
முதலில் நம்மை அவர்கள் சவுக்கால் அடிப்பார்கள்..
நாம் அதைப்பற்றி கேள்வி கேட்பதற்குள்
அந்தக் காயத்தில் உப்பைத் தடவுவார்கள்…
அப்போது நாம் சவுக்கடியைப்பற்றியல்ல
உப்பின் எரிச்சலைப் பற்றி பேசத் தொடங்கிவிடுவோம்…
அவர்கள் உடனே நம்மேல் ஒரு வாளி
கொதிக்கும் தண்னீரை ஊற்றுவார்கள்
அப்போது நாம் உப்பைப்ப பற்றியல்ல…
வெந்நீரின் கொடுமை பற்றி பேசத் தொடங்கிவிடுவோம்..
அப்போது அவர்கள் நம் நகங்களை பிடுங்க ஆரம்பிப்பார்கள்..
நாம் ’நகங்களை பிடுங்காதே…
நகம் வைத்திருப்பது எங்கள் உரிமை’ என்று
முழங்கத் தொடங்குவோம்…
இப்படித்தான் நாம் வழிநடத்தப்படுகிறோம்..
இப்படித்தான் நாம் வேட்டையாடப்படுகிறோம்..
எப்போதும் நெருக்கடிகளின் நுகத்தடிகள்
நம் கழுத்தை அழுத்தி கொண்டேயிருக்கும்….
நாம் களைத்துப்போய்விட்டோம்..
இந்தக் காலம் இதயமற்றது..
இந்தக் காலம் வஞ்சகமானது…
இந்தக் காலத்தில் எதிரி..
இருளில் மறைந்திருந்து சூதாடுகிறான்…
நாம் என்ன செய்யபோகிறோம் என
நம் குழந்தைகள் அச்சத்துடன்
நம் முகத்தையே பார்கிறார்கள்..
மக்கள் நலன் கருதி.. எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் எழுத்துக்கள் பிற தளங்களில் இருந்து….
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சாமானியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் ஒடுக்கப்பட்டும், நீதி மறுக்கப்பட்டு வரும் வேளையில் அம்மக்களுக்கு குரல் கொடுக்கவும், உதவிக் கரம் நீட்டவும் ஒரு பிரிவினர் உழைத்த வண்ணமும் அத்தடங்கல்களை உடைத்த வண்ணமும்தான் உள்ளனர். அந்த வரிசையில் தேவையுடையவர்களை கண்டறிந்து உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலிதான் ஈ-சேரிட்டி (E-CHARITY).
இந்த பதிய செயலி UNITED WELFARE ORGANISATION என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டு தற்சமயம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த UNITED WELFARE ORGANISATION – (www.unwo.org) அமைப்பு சமுதாயத்தின் மீமு அக்கறை கொண்ட தன்னார்வலர்களால் சென்னையை தலையிடமாக கொண்டு ஆரம்பம் செய்து இன்று உலகில் உள்ள பல்வேறு மக்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். அவர்களின் சேவையில் ஒரு பகுதிதான் இந்த ஈ-சேரிட்டி (E-CHARITY) செயலி.
இந்த செயலி மூலம் தேவையுடையவர்களின் விபரங்களை சேகரித்து, சரிபார்த்து தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும் உலகில் பல இடங்களில் ஜகாத் போன்றவை முறையாக வசூலிக்கப்பட்டாலும் தேவையான நேரத்தில் தேவையுடடையவர்களுக்கு சென்றடையாமல் இருக்கும் நிலையும் இருந்துதான் வருகிறது. மேலும் இந்த செயலி மூலமே தானம் செய்ய விரும்புபவர்களும் தங்களுடைய விபரங்களை பதிவு செய்து தான தர்மங்கள் செய்யலாம். அதே போல் இந்த அமைப்புக்கு தானம் செய்யும் தொகைக்கு இந்திய அரசியல் சட்டம் 80G எனப்படும் வரி விதிவிலக்கும் உண்டு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆதரவற்ற பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நிஷா ஃபவுண்டேஷன் மற்றும் தமுமுக …
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை பைத்துல்மால் அருகே கடந்த மூன்று நாட்களாக எந்த விபரமும் இல்லாமல் இருப்பதாக அப்பகுதியைச் சார்ந்த ஹாலிக் என்பவர் நிஷா ஃபவுண்டேஷன் மற்றும் தமுமுக உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
இத்தகவல் அறிந்தவுடன் அப்பெண்ணை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் மூலம் முதலுதவிகள் அளிக்கப்பட்டு உணவும் வழங்கப்பட்டது.
பின்னர் அப்பெண்மணியைப் பற்றிய தகவல் கீழக்கரை காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்டு, அப்பெண்மணியை உரிய இடத்தில் சேர்ப்பதற்கான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் வசித்து வருபவர் சாகாய ராபிட் (21). இவர் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்கை நெறி மற்றும் இஸ்லாம் கூறும் வாழ்கை நெறியால் ஈர்க்கப்பட்டு அவரும், அவருடைய குடும்பத்தாரும் இஸ்லாம் மார்க்கத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றதுடன் தங்களுடைய பெயர்களையும், முஹம்மது இபுறாகிம் என்றும் அவருடைய தாயார் ஆயிஷா மரியம், மரியம் சகானா, ரிகானா பாத்திமா என்றும், சகோதரர் அப்துல்ரஹீம் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் பங்கு கொண்ட தமுமுக பாதுஷா, லக்கி கோல்ட். முகைதீன் அடுமை. அமீன், . இன்ஜினீயர் நசீர், அஹ்மது ஜமால்தீன் மற்றும் கண்மணி சீனி ஆகியோர் கலந்து கொண்டு இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள நெறிமுறைகளை தெளிவுபடுத்தியதோடு, இஸ்லாம் மார்க்கத்தில் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லை என்பதையும் வலியுறுத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வடக்குத் தெரு நாசா அமைப்பு சார்பாக பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) மற்றும் வடக்குத் தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை ( NASA TRUST) சார்பாக இன்று (08-08-2017) பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியான ORGANIC BABY – ஆரோக்கியமான குழந்தை என்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பெண்களுக்காகவே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை லயான் நிஷா தொகுத்து வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஓருங்கிணைப்பை வடக்குத் தெரு பெண்கள் மதரசா நிர்வாகிகள் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் POWER POINT PRESENTATION மூலம் முன்னோர்கள் பிரசவித்தது எப்படி??, எங்கே போனது சுகப்பிரசவம்??, எங்கிருந்து வந்தது சிசேரியன் முறை பிரசவம்??, சுகமான பிரசவம் வேண்டுமா??, குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தை வேண்டுமா??, நிம்மதியான, சந்தோசமான, ஆரோக்கியமான வாழ்கை அமைய வேண்டுமா?? என்ற அடிப்படையில் பெண்களுக்கு விழிப்புணர்வு விளக்கங்கள் வழங்கப்பட்டது. அதேபோல் கலப்பட உணவால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமைகளும் விளக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA) மற்றும் தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம் கீழக்கரை நூரானியா பள்ளி வளாகத்தினுள் சிறப்பாக நடைபெற்றது..
இந்த மருத்துவ முகாமில் மருத்துவ ஆலோசனைகளும், மருத்துவ வழிகாட்டுதல்களும் கலந்து கொண்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA) சிறப்பாக செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சிறப்பு நிகழ்ச்சிகள்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 71வது சுதந்திர தினமாகும். இத்தினத்தையொட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் தெற்கு கிளை மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடத்த உள்ளார்கள். இந்த முகாமுக்கு கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைக்கிறார்.
அதே போல் 15 ஆகஸ்ட் அன்று கீழக்கரை தவ்ஹீத் ஜமாத், தெற்கு கிளை மாணவர் அணி சார்பாக சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இலவச கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் காலை 9.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடைபெற உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புனிதமான ரமலான் மாதம் தொடங்கியது முதல் பெரியவர் முதல் சிறியவர் வரை நன்மைகளை கொள்ளையடிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு பல நன்மையான காரியங்களை செய்து வருகிறார்கள்.
இந்த புனித மாதத்தில் வீண் விரயம் பலரால் செய்யப்பட்டாலும், மற்றொரு புறம் இரவு நேரங்களில் நோன்பு வைப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உணவு கிடைப்பதற்கும் சிரம்ப்படும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்களுக்கும் நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனேகமான தெருக்களில் ஜமாஅத் மூலமாகவும், சமூக அமைப்புகள் மூலமாகவும், இயக்கங்கள் மூலமாகவும் தினமும் பல்வேறு தெருக்களில் சஹர் உணவு தயார் செய்யப்பட்டு இரவு நேரங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று (21-06-2017) புது கிழக்குத் தெரு மற்றும் 500 ப்ளாட் பகுதி சகோதரர்களால் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அதே போல் நடுத்தெரு பள்ளியிலும் சஹர் உணவு விருந்து நடைபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இரத்த தானத்திலும் ஆம்புலன்ஸ் சேவையிலும் முன்னோடியாக திகழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரத்தில் உள்ள இரத்த தான வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை கடந்த 5 மாதத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக 123 நபர்கள் இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நற்பணி செயல் மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயமாகும்.
இது சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டம் இரத்த தான பொறுப்பாளர் நசுருதீன் அவர்களிடம் கேட்ட பொழுது இதற்காக உழைத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக என்று கூறி முடித்துக் கொண்டார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் அவர்களின் கிளைகள் மூலமாக இரத்த தான சேவை மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாக செய்து வருவது குறிப்பிடதக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் பல செல்வதர்களும், வெளிநாட்டு வாழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் இரவு நேர மருத்துவ வசதியும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்னும் முழுமையடையாமல் குறைபாடாகவே இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் பொதுத்தளம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக), தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், வடக்குத் தெரு சமூக அறக்கட்டளை (NASA TRUST) போன்ற இன்னும் பல சமூக அமைப்புகள் ஆம்புலனஸ் மற்றும் அதன் சார்ந்த வசதிகளை செய்ய பல முனையில் நிதி திரட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.
இன்று (30-05-2017) இப்பணியிணை ஊக்குவிக்கும் வண்ணம் கீழக்கரையைச் சார்ந்த வள்ளல் சீதக்காதி புரமோட்டர்ஸ் நிறுவனம், ஆம்புலன்ஸ் சேவைக்காக நிதி திரட்டும் சமூக அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினர். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், இந்நிறுவனத்தின் செயல்பாடு சமூக அக்கறையை வெளிபடுத்தியுள்ளது. இது மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சமூக அக்கறை மீது ஒரு ஈடுபாட்டை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. கீழை நியூஸ் வோர்ல்டு நிர்வாகம் இந்நிறுவனம் இன்னும் பல சமூக சேவைகள் செய்ய வாழ்த்துகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரமலான் மாதத்ததில் அதிக நன்மையை கொள்ளையடிக்கும் கீழக்கரை தெற்கு தெரு மக்கள்.. ஏழை எளியோருக்கு நோன்பு வைக்க சஹர் உணவு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
புனித மிக்க ரமலான் மாதத்தில் சக்தியுள்ள அனைவரும் நோன்பு வைக்க கடமைப்பட்டவர்கள். அதே சமயம் அனைத்து நோன்புகளையும் இறைவனின் பொருத்தத்தை வேண்டி வைக்க மனம் இருந்தாலும், முறையான உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஏழை எளியோர்களும் உள்ளனர்.
மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வண்ணம் கீழக்கரை தெற்குத் தெருவச் சார்ந்தவர்கள் ஜமாஅத் ஒத்துழைப்புடன் தினம் 220 தேவையுடைய நபர்களுக்கு சஹர் உணவு தயார் செய்து வழங்குகிறார்கள். இது பற்றி தெற்குத் தெருவைச் சார்ந்த நபர் ஒருவர் கூறுகையில், சஹர் உணவு தினமும் சாயங்காலம் முதல் தயார்படுத்த தொடங்கி இரவு 10 மணி முதல் 12 மணிக்குள் தேவையானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை திறமே செய்து முடிக்க இளைஞர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து செயல்படுகிறார்கள். இந்தப் பணியை தினமும் சரியான நேரத்திற்குள் தேவையுடையவர்களின் இல்லங்களுக்கே சென்று கொடுக்கப்படுகிறது. இதற்கான செலவினங்களை சுமார் 30 பேர் 15 ஆயிரம் வீதம் பங்கிட்டு இப்பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றார்.
இப்பணி இன்னும் சிறப்பாக அமைய கீழை நியூஸ் வோர்ல்டு நிர்வாகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இது போன்ற சமூக சேவை செய்திகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 00966500818177 என்ற WhatsApp எண்ணுக்கு புகைப்படத்துடன் அனுப்பலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் கருணை அடிப்படையில் மாரிமுத்து என்பவருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது.
பரமக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சார்ந்த R.மந்தன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பணிக்காலத்தில் இயற்கை எய்தினார். அவரின் வாரிசான மாரிமுத்து என்பவருக்கு கருணை அடிப்படையில் கீழக்கரை ஆணையர் வசந்தி மற்றும் தலைமை எழுத்தர் சந்திரசேகர் முன்னிலையில் பணி உத்தரவு இன்று (18-05–2017) கீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுர நகரின் பிதாமகன் என்று செல்லமாக அழைக்கப்படும் சின்னக்கடை, அருப்புக்கார தெருவை சேர்ந்த அமீர் ஹம்சாவுக்கு இராமநாதபுரம் ரோட்டரி கிளப் சார்பாக மனித நேயர் விருது மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அமீர் ஹம்சா அனாதை பிணங்களை அவர்களுடைய வழக்கப்படி அடக்கம் செய்வது. அதுமட்டுமல்லாமல் கிணற்றில் இறந்தவர்கள், தூக்கிட்டு இறந்தவர்கள், சாலை விபத்தில் இறந்தவர்கள், கடல், குளங்களில் இறந்தவர்கள் போன்ற 15000க்கும் மேற்ப்பட்டோர்களை அவரது சொந்த செலவில் அடக்கம் செய்துள்ளார். காவல்துறையினரோ, தீயணைப்பு துறையினரோ மீட்க முடியாத உடல்களை இவர்தான் மீட்டு வருகிறார். சொந்தமாக ஆம்புலன்ஸ் சேவையும் செய்து வருகிறார்.
இவருடைய இந்த மனித நேய செயலை எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மன திருப்திக்காக மட்டுமே செய்து வருகிறார். அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை முடிவீரன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த கூடிய செயலை செய்துள்ளார்.
இவர் கடந்த வாரம் ராமநாதபுரம் கலெக்டரிடம் ஓரு கோருக்கை மனு அளித்துள்ளார். அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:– கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். சிறு வயது முதலே இந்திய நாட்டிற்காக பாடுபடவேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. ஆனால், சூழ்நிலை காரணமாக ராணுவத்தில் சேர முடியவில்லை. ஆனால் இந்திய ராணுவத்திற்காக நமது பங்களிப்பை ஏதாவது வகையில் வழங்க வேண்டும் என்ற ஆவல் ஆரம்பம் முதல் இருந்தது. இந்திய திருநாட்டிற்காக தனது குடும்பத்தையும் மறந்து நமக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு பயன்பெறும் வகையில் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன்.
எனக்கு இதுவரை எந்த உடல்நலக்குறைவும் ஏற்பட்டதில்லை. மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டதில்லை. நல்ல நிலையில் உடலை பராமரித்து கொண்டிருக்கும் எனக்கு இந்த உடலை பயன்பெறும் வகையில் ராணுவத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளேன். நான் இறந்த பின்பு, எனது உடல் உறுப்புகளை இந்திய ராணுவத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வயதான காலத்தில் தனது உடல் உறுப்புகளை இந்திய ராணுவத்திற்காக ஒப்படைக்க முன்வந்தவரின் செயல் அனைவரையும் நெகிழச்செய்தது. நாட்டிற்காக தியாகம் இப்படியும் செய்யலாம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் 05-05-2017 அன்று SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் கீழக்கரை நகர் SDPI கட்சி அலுவலகம் முன்பு சர்பத் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் கீழக்கரை தாலுகா அலுவலகம் தாசில்தார் K.M.தமிம் ராஜா கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு. சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளார் பி.அப்துல் ஹமீது கலந்து கொண்டார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் நகர் தலைவர் கிருஷ்ண மூர்த்தீ மற்றும் ராமநாதபுர ஜமாலியா ஜூவல்லர்ஸ் சாதிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பை SDPI தெற்க்கு கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் அனைத்து கிளை SDPI நிர்வாகிகளுடன் SDTU தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இத்திறப்பு விழாவில் 350க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் சித்திரை வெயில் எங்கும் கொளுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரமும் தொடங்க இருக்கிறது. தென் மாநிலமான இராமநாதபுரம் மாவட்டம் கடுமையான வெப்பத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது.
மக்களின் தாகத்தைப் போக்க தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மக்களின் தாகத்தை போக்கும் வண்ணம் மோர் பந்தல் அமைத்து நீர், நீர்மோர் மற்றும் பழரச பானங்கள் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் இன்று கீழக்கரை SDPI கட்சி, வள்ளல் சீதக்காதி மற்றும் முஸ்லிம் பஜார் சாலை சந்திப்பில் நீர் பந்தல் அமைத்து மக்கள் தாகம் தீர்த்து வருகிறார்கள்.
இப்பந்தலை நகர் தலைவர்.குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர். கீழை அஸ்ரப் தலைமையில் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யபட்டு செய்யது முஹம்மது என்ற அஸ்கர் திறந்து வைத்தார். இந்த மோர் பந்தல் ஒருங்கிணைப்பினை தெற்கு கிளை நிர்வாகிகள்.காதர் மற்றும் நெய்னா மற்றும் தொகுதி இணைச் செயலாளர்.சித்திக் ஆகியோர் செய்தனர்.
இந்த மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் இணைச் செயலாளர்.இபுனு முஹைதீன் மற்றும் இணைச் செயலாளர் முர்சலீன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்வீரர்களும் SDPI கட்சியின் வடக்கு கிளைத்தலைவர் நதீர் மற்றும் செயலாளர் நிஜாமுதீன் மற்றும் கிழக்கு கிளை செயலாளர் ரசீது அவர்கள் மற்றும் மேற்கு கிழைப் பொருளார் பாசித் மற்றும் SDTU தொழிற்சங்கம் தலைவர் அருள் மற்றும் செயலாளர் ராசிது மற்றும் பொருளாளர்.ஹபீப் மற்றும் நகர மற்றும் கிளைகளின் செயல்வீரர்களும் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக மருத்துவ பொருட்கள் உதவி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக கீழக்கரை நகர் கூட்டத்தில் பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவமனையின் தேவைகளுக்காக ரூபாய்.6000/- மதிப்பிலான மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் டாக்டர் கே. எம். முரளி, மாவட்டதுணைத்தலைவர் ஆர். ஜி. சுப்பிரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Y. S. சீனி சேகு, கீழக்கரை நகர் தலைவர் செல்வம், நகர் துணைத்தலைவர் ஜே. ஏ. பெருமாள், நகர் பொருளாளர் முஹம்மது இர்பான், நிஷா பவுண்டேஷன் எஸ். சித்திக், நகர் அமைப்பாளர் எம். கருப்பணன் மற்றும் மாவட்ட, நகர் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் உதவிப் பொருட்களை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் மற்றும் கீழ்க்கரை நகர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளருமான அப்பா மெடிக்கல்ஸ் எஸ். சுந்தரம் ஆகியோரிடம் வழங்கினார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை இலவசமாக வழங்கும் நிறுவனம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இந்தியாவில் அதுவும் கீழக்கரையில் டெங்கு காய்ச்சலின் வீரியம் மிக கடுமையாக நிலவி வருகிறது. இது சம்பந்தமாக கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் தவிர்த்து பல் வேறு சமூக அமைப்புகளும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழுப்புணர்வு செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் போன்ற செயல்களை மிக வீரியமாக செய்து வருகிறார்கள். ஆனால் டெங்கு கொசுவின் வீரியமோ அதைவிட வேகமாக கீழை நகரில் பரவி வருவது மிகவும் வேதனையான செய்தி.
இந்த மன வேதனைக்கு இதம் தரும் விதமாக சென்னையை மையமாக வைத்து செயல்படும் BRIOBLISS எனும் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று THROMBOBLISS Syrup எனும் இரத்த அணுக்களை 72 மணி நேரத்தில் அதிகரிக்கும் மருந்தை ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும் இது சம்பந்தமாக கீழை நியூஸ் சார்பாக அந்நிர்வாகத்தை தெடர்பு கொண்ட பொழுது இந்நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான R.சத்தியநாராயனண் என்பவர் இத்தகவலை உறுதி செய்ததுடன், ஏழை எளிய மக்களுக்கு இச்செய்தியை எத்தி வைக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் மருந்துகளின் தேவைகளுக்கு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Admin Office: No. 14,
Elliots Beach Road,
North End, Besant Nagar,
Chennai – 600090.
Ph : 044 – 42646010.
Fax : 044 – 42646011.
Mob : 09444320704
Email :[email protected]
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.