கீழக்கரையில் வசித்து வருபவர் சாகாய ராபிட் (21). இவர் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்கை நெறி மற்றும் இஸ்லாம் கூறும் வாழ்கை நெறியால் ஈர்க்கப்பட்டு அவரும், அவருடைய குடும்பத்தாரும் இஸ்லாம் மார்க்கத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றதுடன் தங்களுடைய பெயர்களையும், முஹம்மது இபுறாகிம் என்றும் அவருடைய தாயார் ஆயிஷா மரியம், மரியம் சகானா, ரிகானா பாத்திமா என்றும், சகோதரர் அப்துல்ரஹீம் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் பங்கு கொண்ட தமுமுக பாதுஷா, லக்கி கோல்ட். முகைதீன் அடுமை. அமீன், . இன்ஜினீயர் நசீர், அஹ்மது ஜமால்தீன் மற்றும் கண்மணி சீனி ஆகியோர் கலந்து கொண்டு இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள நெறிமுறைகளை தெளிவுபடுத்தியதோடு, இஸ்லாம் மார்க்கத்தில் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லை என்பதையும் வலியுறுத்தினர்.
1 comment
ASSLAMU Allikum bro…
Welcome
Comments are closed.