10
மேலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆய்வு செய்தார்.மேலூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழையூர், தனியாமங்கலம் பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் பார்வையிட்டு மரக்கன்று நட்டார். கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கொரானா வழி முறைகள் பின்பற்றப் படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும் 10.19 லட்சம் செலவில் கட்டப்படும் அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தாசில்தார் இளமுருகன், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, உதவி வளர்ச்சி திட்ட அலுவலர் லதா, உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.