ஆட்சிகள் மாறினாலும்… காட்சிகள் மாறுவதில்லை… குடி தண்ணீருக்காக மைல்கள் நடக்கும் பொதுமக்கள்..

இராமநாதபுரம் மாவட்டம் என்றாலே “வறட்சி” என்ற நிலைதான் பல காலம் காலமாக நிலவி வருகிறது.  ஆட்சிக்கு வருபவர்கள் பல குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றினாலும், அதை முறையாக பராமரிக்காத காரணத்தால் மக்களுக்கு பலன்கள் கிடைக்காமலே போய் விடுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவை சுற்றியுள்ள பகுதியான கீழ தில்லையேந்தல் ஊராட்சி சின்ன பாளையம் ஊர் பகுதயில் பொதுமக்கள் குடிநீருக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக நடந்தும், தள்ளுவண்டியிலும் சென்று குடிநீர் எடுக்கும் அவல நிலையே நீடித்து வருகிறது.

ஆட்சிகள் மாறினால் “விடிவுகாலம் பிறக்கும்” என்று நம்பியிருக்கும் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா??

உதவிக்கரம் நீட்டுங்கள்..