Home செய்திகள் பள்ளி ஆசிரியரை லாரி ஏற்றிக்கொன்ற கள்ளக்காதலியின் கணவன் உள்ளிட்ட 8 பேர் கைது .

பள்ளி ஆசிரியரை லாரி ஏற்றிக்கொன்ற கள்ளக்காதலியின் கணவன் உள்ளிட்ட 8 பேர் கைது .

by mohan

நாட்றம்பள்ளி. பிப்.3 – திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் கடந்த 31-ம் தேதி விடியற்காலை 35 வயது மதிக்கதக்க வாலிபர் தலைநசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த சந்தூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார (37) ஊத்தங்கரை அடுத்த ஜோதிநகர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதே பள்ளியில் திருமணமான ஆசிரியை உடன்கள்ளதொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதை அவரது கணவன் கண்டித்த நிலையிலும் கள்ளதொடர்பு தொடர்ந்து உள்ளது.ஆசிரியையின் கணவன் ஒரு கும்பலுடன் சிவக்குமாரை கடத்தி வந்து நாட்றம்பள்ளி பகுதியில்தான் எடுத்து வந்த மினி லாரி மூலம் கொன்றது தெரியவந்தது.நாட்றம்பள்ளி போலீசார் ஊத்தங்கரை போலீஸ் உதவியுடன் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கள்ளக்காதலி கணவன் இளங்கோவன் (42) மற்றும் வெள்ளைச்சாமி(40) ஜீவகந்திரஹரிகரன்(29) அறிவழகன்(39) சத்தியமூர்த்தி (30) இளங்கோ(27) வேம்பரசன்(21) கணேசன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!