44
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அதன் உபரி நீரை உசிலம்பட்டி 58கிராம கால்வாயில் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை தமிழக அரசு தண்ணீர் திறக்க காலம் தாழ்த்திவருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு வைகை அணையிலிருந்து 58கிராம கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க கோரி கள்ளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், மக்கள் பார்வர்ட் கட்சியின் மாநில செயலாளர் நேதாஜி உள்ளிட்ட 4பேர் கையில் பதாகைகளை பிடித்து அரசுக்கு எதிராக கோஷமிட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி 4பேரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.