Home செய்திகள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.5.14 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி கலெக்டர் வழங்கினார்..

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.5.14 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி கலெக்டர் வழங்கினார்..

by mohan

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் 133 நபர்களுக்கு ரூ.5.14 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மறவர் திருமண மஹாலில் 06.08.2021 வெள்ளிக் கிழமை கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் பயன் பெற்ற 133 பயனாளிகளுக்கு ரூ.5.14 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 99 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.99,000 /- மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பில் 10 பயனாளிக்கு ரூ.58,650 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரமும், 10 பயனாளிக்கு ரூ.48,700/- மதிப்பீட்டில் இலவச தேய்ப்புப்பெட்டியும், சமூக நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.10,700/- மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரமும், 5 பயனாளிகளுக்கு ரூ. 1,75,000/- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும், தோட்டகலைத்துறை சார்பில் 1 பயனாளிக்குரூ.87,500/- மதிப்பீட்டில் வெங்காயம் சேமிப்பு கூடம் அமைப்பதற்கும், 2 பயனாளிகளுக்கு எலுமிச்சை பரப்பு விரிவாக்கத்திற்கும் ரூ. 26,400/- மதிப்பீட்டில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு தெளிப்பான் மற்றும் நெல் களை உருட்டும் கருவி ரூ.8,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் ஆக மொத்தம் 133 பயனாளிகளுக்கு ரூ.5,13,950/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி பேசியதாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளிலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி, வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி, தென்காசி சட்டமன்ற தொகுதி, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு 688 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு 133 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்”; என்ற தமிழக அரசின் உயரிய நோக்கத்திற்கிணங்க பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு உதவித் தொகையும், பொது மக்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாது ஊராட்சி, நகராட்சி பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு இலவச வீட்டுமனை வசதிகளையும், வருவாய்துறை மூலம் இலவச வீட்டுமனை பட்டாவும் அதுபோல ஊரக வளர்ச்சித் துறையிலும் இலவச வீட்டுமனைத் திட்டங்களை தமிழக அரசு பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. இத்தகைய நலத் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும். மேலும், கொரோனா 3-ம் அலை பரவ வாய்ப்புள்ள இச்சூழ்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டும், பொது மக்கள் வெளியில் வரும் போது முகக்கவசம் அணிந்தும்,சமூக இடைவெளியை கடைபிடித்தும், கொரோனா பரவலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டுமென ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர். இரா.ஜனனி சௌந்தர்யா, தென்காசிவருவாய் கோட்டாட்சியர் ராமசந்திரன், தனித்துணை ஆட்சியர் சமுக பாதுகாப்புத் திட்ட அலுவலர் (பொ) ராஜமனோகரன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் குணசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட பொறுப்பாளர் (வடக்கு) செல்லத்துரை, கடையநல்லூர் வட்டாட்சியர் ஆதிநாராயணன்,உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!