Home செய்திகள் டிஎன்டி சான்றிதழ் வழங்கக் கோரி 500க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம்

டிஎன்டி சான்றிதழ் வழங்கக் கோரி 500க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம்

by mohan

மதுரை,தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 68 சாதியினருக்கு டிஎன்சி என்பதை டிஎன்டி என மாற்றித் தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டம் நடைபெற்றதை அடுத்து தமிழக அரசு டிஎன்சி பிரிவை டி என்டி என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்து தற்போது வரை டி என் டி சான்றிதழ் வழங்கப்படாததால் டிஎன்டி சான்றிதழ் வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை வைத்து எந்த நடவடிக்கையும் இல்லை என கூறி இன்று மதுரை – தேனி சாலையில் உள்ள தேவர் சிலை அருகே சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு உடனடியாக டிஎன்டி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பினர் இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை – தேனி மற்றும் திருமங்கலம் – சோழவந்தான் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனால் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனைத் தொடர்ந்து போராட்டக் களத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு டிஎன்டி சான்றிதழ் வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வந்ததால் போலீசார் போராட்டத்திற்கு தலைமை வகித்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு,சீர்மரபினர் போராட்டக்குழு தலைவர் தவமணி உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்று குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிச் சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருமண மகாலில் தங்க வைத்துள்ளனர் இந்த போராட்டத்தால் மதுரை – தேனி மற்றும் திருமங்கலம் – சோழவந்தான் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போராட்டக்குழுவினர் தமிழக அரசு கடந்த ஆண்டு டிஎன்சி பிரிவை டிஎன்டி என மாற்றி அறிவித்து ஓராண்டு ஆகியும் இன்னும் அதற்கான சான்றிதழ் வழங்கவில்லை தொடர்ந்து தமிழக அரசு சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தினால் தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

உசிலை    சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com