உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் பிறந்த தினத்தை மருத்துவ தினமாக கொண்டாடும் வகையில் 85 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினா் நீதிபதி தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப் நாயக்கணூரில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் குடும்ப நல்வாழ்வு துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 85 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமை தாங்கினாா். இதில் உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி மருத்துவர் சுசிலா மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உசிலம்பட்டி முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பால்பாண்டி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன்,ஊராட்சி ஒப்பந்தார் இளஞ்செழியன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.