16
உசிலம்பட்டி தேனி ரோட்டில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 24 வார்டுகளுக்கு ரூபாய் 73 கோடி மூன்று லட்சம் மதிப்பீட்டில் 58 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த குடிநீர் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் இணைக்கும் திட்டம் புதிய உயர் அழுத்த பி.வி.சி பைப் அமைக்கும் பணியை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நகர செயலாளர் பூமா ராஜா நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் பொதுப் பணி மேற்பார்வையாளர் கணேசன், சுகாதார அலுவலர் அகமது கபீர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் துரைக்கண்ணன் உதவி பொறியாளர் நடராஜன் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.