10
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை.இவர் தன்னுடைய தோட்டத்தில் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளர். இந்நிலையில் வைக்கோல்களை வாடிப்பட்டியைச் சேர்;ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.இதில் முத்துப்பாண்டி வைக்கோல்களை ஏற்றுவதற்காக மினிலாரியுடன் (டாடா ஏசி) குப்பணம்பட்டிக்கு வந்துள்ளார்.தோட்டத்தில் வைக்கோல் ஏற்றி விட்டு பிரதான சாலைக்கு வரும் போது சாலையில் மின்கம்பி மினிலாரி மீது உரசியதில் லாரி திடீரென தீப்பற்றி மளமள எரிந்தது.இதில் மினி லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.சம்பவமறிந்த கிராமத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.சம்பவமறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.