Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் ரூ.35 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்..

தென்காசி மாவட்டத்தில் ரூ.35 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் ரூ. 35 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாராண நிதி உயர்கல்வி உதவித்தொகை ரூ.1 இலட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 34.42 கோடி மதிப்பில் கடனுதவியும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் 10 பயனாளிகளுக்கு இளைஞர் சுய வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூபாய் எழுபத்து நான்கு இலட்சத்து அறுபது ஆயிரத்து எழுநூற்று நான்கு மதிப்பிலும், கூட்டுறவுத் துறை சார்பில் 01 பயனாளிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் ரூபாய் பதினொரு இலட்சத்து அறுபத்து ஐந்து ஆயிரம் மதிப்பில் உழவு இயந்திரம் மற்றும் அதன் பின்புறத்தில் இணைக்கப்பட்ட கருவியும், தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம், பாரதப் பிரதமரின் நுண்ணுயிர்ப் பாசனத் திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூபாய். ஐந்து இலட்சத்து தொண்ணூற்று இரண்டு ஆயிரத்து ஐந்நூற்று அறுபத்து நான்கு மதிப்பிலும், வேளாண்மைத் துறை சார்பில் உளுந்து வறட்சி நிவாரணம், நெல் வறட்சி நிவாரணம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மின்கலத்தில் இயங்கும் விசை தெளிப்பான் மற்றும் தார்பாலின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் 08 பயனாளிகளுக்கு ரூபாய். ஐம்பத்து ஏழு ஆயிரத்து இருநூற்று எழுபத்து ஐந்து மதிப்பிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.12 இலட்சம் மதிப்பில் கடனுதவியும், வாழ்ந்து காட்டுவோம் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூபாய் பதினொரு ஆயிரத்து தொண்ணூறு ஆயிரம் மதிப்பில் கடனுதவியும், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்கள் ரூபாய். எட்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.35.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இளைஞர் நலன் (ம) விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் திட்டத்தின் சார்பில் மகத்தான சாதனைகள் 2 ஆண்டு ஆட்சி ஓயா உழைப்பின் ஈராண்டு புகைப்படக் கண்காட்சியினையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி மற்றும் தலைவர்களின் ஓவியங்கள், வண்ணமிகு பறவைகள் உள்ளிட்ட காய்கறி வடிவமைப்பு கண்காட்சியினையும் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சியினையும், இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதல்வரின் முகவரி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் 15-வது ஒன்றிய நிதிக்குழு பணி முன்னேற்றம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், திறன் பயிற்சி, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், வருவாய்த்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் துறை, ஆவின், உள்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது, இந்நிகழ்ச்சியில் 478 பயனாளிகளுக்கு ரூ.35.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளிக்கும் போது அலுவலர்கள் அவற்றை உடனடியாக பரிசீலித்து பதிலளிக்க வேண்டும். நீண்ட நாள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கல்வி கற்க செய்வதிலும், கல்வி திட்டங்கள் அனைத்தும் எல்லா மாணவ, மாணவியர்களுக்கும் சென்றடைவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, கிராம சாலைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளில் அலுவலர்கள் அதிக கவனம் செலுத்தி விரைவாக பணிகளை முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் பொது தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆய்வின் போது மக்கள் பிரதிநிதிகளும் உடன் அழைத்து செல்லப்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் தென்காசி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பணிகளில் சுணக்கம் கண்டறிப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே அனைத்துத்துறை அலுவலர்களும் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து அரசுக்கு நற்பெயரை பெற்று தர வேண்டும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருங்கிணைத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். கூட்டத்தில் சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அரசு செயலாளர் தரேஸ் அகமது, மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), சதன் திருமலைகுமார் (வாசுதேவநல்லுார்), மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எஸ்.தமிழ்ச் செல்வி போஸ், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!