92
படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜா! கொலையாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்..
ஆறு பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜா வை கொலை செய்த கொலையாளிகளை பிடிப்பதற்காக திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் 4 தனிப்படையும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை உதவி ஆணையர் பிரதீப் தலைமையில் கொலையாளிகள் பற்றிய விசாரணையும் கொலையாளிகளை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கமிஷனர் மூர்த்தி மேலும் தெரிவித்தார். விசாரணை துரிதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
You must be logged in to post a comment.