15
இராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி – அரிச்சல் முனை கடற்கரை பகுதியில், 8 இடங்களில் புதைந்து இருந்த 927 ஆமை முட்டைகளை வனத்துறையினர் இன்று (14.02.2019) காலை சேகரித்தனர். பின்னர் வனத்துறை அமைத்துள்ள பொரிப்பகத்தில் குஞ்சு பொரிப்பதற்கு புதைத்து வைத்தனர். ஆமை முட்டைகளில் இருந்து குஞ்சுகள் 45 நாட்களில் இருந்து 60 நாட்களில் வெளிவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வனச்சரகர் சதீஷ்குமார் கூறும்போது, ‘‘நடப்பாண்டு இதுவரை 4,674 ஆமை முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிக்க வைத்துள்ளனர்’’ என்றார்.
You must be logged in to post a comment.