கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்களுக்கு; கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் கௌரவிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசபாக்கம் பகுதியில் ,கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்களை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் கௌரவித்தார்.
கரோனா நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் ஊரக வளர்ச்சித் துறையினர், சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக தூய்மை காவலர்கள் பணியாளர்கள் மஸ்தூர் பணியாளர்கள் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரத் துறையினர் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகின்றனர் கிணறுகள் குரானா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினர் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் அனைவருக்கும் கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் பணிபுரியுமாறும், தங்கள் பணி தெய்வீக பணி விலைமதிப்பில்லாத உயிர்களை பாதுகாத்திட இரவு பகல் பாராமல் உங்களை இருகரம் கைகூப்பி வணங்குகின்றேன் என்றார் .
நிகழ்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு, மருத்துவர் ஜீவராணி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அன்பழகன் போளூரில் வீட்டு வசதி கடன் சங்க தலைவர் பொய்யாமொழி மற்றும் உடன் பலர் இருந்தனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.