Home செய்திகள்உலக செய்திகள் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் உதவி உபகரணங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் உதவி உபகரணங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

by Abubakker Sithik

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் உதவி உபகரணங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 12.02.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் பார்வையற்ற 03 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10.293 மதிப்பில் மொத்தம் ரூ.30,879 மதிப்பிலான எழுத்துக்களை பெரிதாக்கிக் காட்டும் (Magnifier) உருப்பெருக்கிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி வட்டாரம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சுய உதவிக் குழுவினரின் பன்முக கலாச்சாரப் போட்டிகளான கயிறு இழுத்தல், கபடி, கோலப்போட்டி, குழுப்பாடல், குழு நாடகம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுய உதவிக் குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 547 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெய பிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குருவம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!