இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தாசீம் பீவி அப்துல் மகளிர் கல்லூரி 2020 ஆம் ஆண்டுக்கான முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி இணைய வழியாக நடைபெற்றது. 21, 22, மற்றும் 23.01.2021 ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு சுவையான நிகழ்வுகள் நடந்தேறியது.
இறை வணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் சுமையா முன்னிலை வகித்தார் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அஹமது புகாரி தலைமை ஏற்றார். அழகப்பா பல்கலைக்கழக மகளிர் கல்வி குழு சார்ந்த முனைவர் கே. மணிமேகலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பிரகாசிப்பு என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஆண்டுகளில் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களுடைய அனுபவங்கள் மற்றும் நிளைவலைகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவிகள் மற்றும் அவரது குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2021/01/F12925E6-001C-47AB-AC90-B744C5A6B9D8.jpeg?resize=917%2C1280)
நிகழ்ச்சியில் பல்வேறு ஆண்டுகளில் கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர்களும் கலந்து கொண்டு தங்கள் பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இணையவெளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி சார்ந்த மற்றும் சாராதவர்கள் 1000 மேற்பட்டோர் யூடியூப் வழியாக கண்டுகளித்தனர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சீதக்காதி அறக்கட்டளை துணைப் பொது மேலாளர் சேக் தாவூத் மற்றும் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னாள் மாணவியர் சங்கத்தின் செயலாளர் முனைவர் எஸ். ஜாகிரா பானு நன்றி உரை நிகழ்த்தினார்.
இன்றைய செய்தி நிரந்தர வரலாறு
கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு.
You must be logged in to post a comment.