மதுரை மாவட்டம் திருமங்கலம் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் இரவு நேரங்களில் சமூக வலைதளங்களில் திகில் படம் பார்த்து பார்த்து மனம் நலம் பாதிக்கப்பட்டதால் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமங்கலம் அரசு மருத்துவ அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பிவைத்தனர் சம்பவம் குறித்து திருமாவளவன் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமங்கலம் முகமது ஷா புரத்தைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி மலர்விழி(38) இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் பாலமுருகன் மதுரை தனியார் பேக்கரியில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் மலர்விழி பாலமுருகன் மதுரை தனியார் பேக்கரியில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் மனைவி மலர்விழி வீட்டில் தனியாக இருக்கும் சமயங்களில் கைப்பேசியில் திகில் படங்களை பார்த்து வந்துள்ளார்.
மேலும் கடந்த ஒரு மாத காலமாக இரவு நேரங்களில் துங்காமல் அவதியுடன் நிலையில் இருந்துள்ளார் இதனால் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு பயமாக உள்ளது என கணவரிடம் கூறியுள்ளார் கணவர் வெளியே சென்ற சமயம் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். உடல் முழுவதும் தீ பற்றி இருந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சுமார் 40% தீக்காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியாக இருக்கும் பெண்கள் கைபேசி மூலம் சமூக வலைதளங்களில் விளையாட்டு மற்றும் திகில் படங்களை பார்ப்பதன் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.