Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை எரிக்க முயற்சித்த குடும்பத்தார்…

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை எரிக்க முயற்சித்த குடும்பத்தார்…

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பைக்கரா முத்துராமலிங்கபுரம் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம், இவரது மகன் ராஜேஸ் (வயது 35) இன்று காலை 11 மணி அளவில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் .

இவரது உடலை போலீஸிற்கு தெரியாமல் குடும்பத்தார் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர்.இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாருக்கு  வந்த தகவலையடுத்து. சுப்ரமணியபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையிலான போலீஸார் மாலை 4 மணி அளவில் திருப்பரங்குன்றம் சாலை பசுமலை சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் செல்வத்தின் உடலை கைப்பற்றி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவர் தற்கொலைக்கு குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் காவல்துறைக்கு தெரியாமல் தற்கொலை கொண்ட நபரை அடக்கம் செய்ய முயன்றது அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!