13
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை மையத்தை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்துவைத்தார்இந்த புத்தக கண்காட்சியில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் புத்தக வாசிப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புத்தகங்களை பார்வையிட்டு அதனை வாங்கிச் சென்றனர் இந்த புத்தக கண்காட்சியில் வரலாற்று நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் சிறந்த கல்விக்கான புத்தகங்கள் பண்டையகால வரலாறுகள் ஆன்மீக சிந்தனைகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றன செங்கம் பகுதியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்
You must be logged in to post a comment.