இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்பலோ குழந்தைகள் மருத்துவமனை இணைந்து இன்று (03/03/2019) இருதய சிகிச்சை முகாம் கீழக்கரை நாடார் பேட்டை பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வு ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் தலைமையிலும், மாவட்ட ஆளுநர் ராஜகோபாலன் முன்னிலையிலும் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமை மாவட்ட நீதிபதி பி.ஆர்.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
மேலும் இதில் “GOLDN HEART” நிறுவன தலைவர் ஷாஜகான், “GOLDEN HEART” ஆலோசகர் டாக்டர்.கோதண்டராமன், “GOLDEN HEART” மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ரோட்டரி துணை ஆளுநர் பார்த்தசாரதி, ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாட் ரோட்டரி சங்க தலைவர் தினேஷ் பாபு, ரோட்டரி பட்டயத்லைவர் அலாவுதீன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராசிக்தீன், ரோட்டரி சங்க பொருளாளர் முனியசங்கர் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் தர்மராஜ், நூகு, சிவகார்த்திக் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டர்.
இதில் 230க்கும் மேற்பட்ட குழந்தைகள் இராமநாதபுரம் மாவட்டம் அன்றி மதுரை, திண்டுக்கல் மற்றும் இன்னும் பல இடங்களில் இருந்து முகாமில் கலந்து கொண்டனர். இதில் 24 குழந்தைகளுக்கு மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காக சென்னை செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வின் இறுதியாக வருகை தந்த அனைவருக்கும் ரோட்டரி செயலாளர் செய்யது முகம்மது ஹசன் நன்றி தெரிவித்தார்.
You must be logged in to post a comment.