Home செய்திகள் காணாமல் போன வழக்கறிஞரின் மொபைல் போனை மீட்டு கொடுத்த மதுரை இரயில்வே போலீசார்..

காணாமல் போன வழக்கறிஞரின் மொபைல் போனை மீட்டு கொடுத்த மதுரை இரயில்வே போலீசார்..

by ஆசிரியர்

கடந்த 27/02/2019 ம் தேதி அன்று (வண்டி எண்.16723) அனந்தபுரி விரைவு வண்டியில் செங்கல்பட்டிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் மஹீலா நீதிமன்றத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் A.K . சோமசுந்தரம் என்பவர் தன்னுடைய மொபைல் போனை தான் பயணம் செய்து வந்த s6 கோச்சில் 38 ம் எண் இருக்கையிலேயே தவற விட்டு இறங்கி வெளியே சென்றவர் பின்பு தனது போனை காணமல் போனதை அறிந்து உடனே சென்னை இரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு இது சம்பந்தமாக தகவல் கூறியுள்ளார்.

பின்னர் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மதுரை இரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் கூற இரயில்வே காவலர் 413 கோபாலகிருஷ்ணன் மூலம் அந்த செல்போனை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது சம்பந்தமாக விரைவாக செயல்பட்டு விலையுயர்ந்த போனை மீட்டு கொடுத்த மதுரை இரயில்வே போலீசாரை காவல் துறை உயர் அதிகாரிகளும் பயணிகளும் பாராட்டினார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!