9
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் மனம் புண்படும் விதமாக கேலி சித்திரங்களை முகநூல் பக்கத்தில் பதிவிடப்படுகிறது. பொதுவாழ்வில் பயணிக்கும் சிறுபான்மையின மக்கள் தலைவர்கள் மீது அவதூறு பரப்பும் ஒரு சில சமூகவிரோதிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசிய ஊரடங்கு காலத்தில் மத துவேச கருத்துகளை பதிவிடுவோரை இரும்பு கரம்கொண்டு காவல் துறை ஒடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
You must be logged in to post a comment.