Home செய்திகள் தமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல், களக்குடி கிராமங்களில் மக்கள் பாதை சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்

தமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல், களக்குடி கிராமங்களில் மக்கள் பாதை சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்

by mohan

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக தமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் வழங்கும் விழா நடைபெற்றது.ஏபிஜெ இணைந்த கரங்கள் இளைஞர் மன்றம் சார்பில் குழந்தைகள் மற்றும் இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை கொத்திடல்-களக்குடி ஆசிரியர் பிரபாகரன் செய்தார். கிராம தலைவர் கேசவன், மன்ற தலைவர் அஜித் மற்றும் ராமஜோதி, ராமநாதன், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஜன.26 குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதியை தீர்மானமாக நிறைவேற்ற இளைஞர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!