12
இராமநாதபுரம் மாவட்டம் புதுப்பட்டினம் அருகே கே.கே.பட்டினத்தைச் சேர்ந்தவர் ருத்ரகுமார், 42. இவர் வீட்டில் வெடி பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி ருத்ரகுமார் வீட்டை தொண்டி காவல் சார்பு ஆய்வாளர் சித்தன், தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அவரது வீட்டின் முதல் தளத்தில் பதுக்கி வைத்திருந்த 20 ஜெலட்டின் குச்சிகள், 20 டெட்டனேட்டர்கள், 4 மீட்டர் வயர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, ருத்ர குமாரை கைது செய்தனர்.
You must be logged in to post a comment.