10
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கம்மாளபட்டியை சேர்ந்தவர் வெள்ளைப் பிரியன். அவரது மனைவி அபிநயாவிற்கும், வலசையை சேர்ந்த ராம்குமாருக்கும் தகாத உறவு இருந்ததாகவும், பலமுறை சொல்லியும் கேட்காத காரணத்தினால் அடிக்கடி சண்டை வந்ததாகவும், 10.10.19ம் தேதி மதியம் 01.00 மணியளவில் மனைவி அபிநயாவுடன் பைக்கில் வலசை சென்று கல்லணை பாலசுப்பிரமணியன் தோட்டம் வழியாக வீட்டிற்கு வரும் போது, அவரது மனைவி ராம்குமார் உடன் தான் வாழ்வேன் என்று மீண்டும் சண்டை போட்டதால், கோபத்தில் வெள்ளைப்பிரியன் கையால் அடித்து அருகில் இருந்த பள்ளத்தில் தள்ளி கொலை செய்தார். *VAO அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளைப்பிரியனை கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.