10
இராமநாதபுரத்தில் ரஜினி மக்கள் மன்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பி.ராமச்சந்திரன் (எ) பாபு தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலர் எம். கபிலன், மாவட்ட துணை செயலர் ஜி. உமாநாத் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலர் ஜி. இளங்கோவன் வரவேற்றார்.
மாவட்ட செயலர்கள் ஏ. செந்தில்வேல் (வர்த்தக அணி), ஏ. சங்கீதா அலெக்சாண்டார் (மகளிரணி), டி. கிருபாகரசேகர் (வழக்கறிஞர் அணி), ஏ. மாரி பிச்சை (மீனவரணி), கே.சரவணன் (விவசாய அணி), ஏ. ராஜிவ் காந்தி (இளைஞரணி துணை செயலர்), ஜி..வாகை குணசேகர் (தகவல் தொழில் நுட்ப அணி இணை செயலர்) ஆகியோர் பேசினர். செயற்குழு உறுப்பினர் ஜி. ராஜா நன்றி கூறினார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.