Home செய்திகள் பாலக்கோடு அருகே பயணிகள் இரயில் தடம் புரண்டது. 2 மணி நேரம் பயணிகள் தவிப்பு

பாலக்கோடு அருகே பயணிகள் இரயில் தடம் புரண்டது. 2 மணி நேரம் பயணிகள் தவிப்பு

by mohan

தர்மபுரி மாவட்டம்  பஞ்சப்பள்ளி அருகே மாவட்ட எல்லைப் பகுதியான காடுசெட்டிப்பட்டியில் காலை 9.45 மணிக்கு பெங்களுரிலிருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பயனிகளுடன் காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் இரயில்  காடுசெட்டிப் பட்டி பகுதியில் ரயிலின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது இதில் பாலக்கோடு .தர்மபுரி சேலம் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் 2 மணி நேரம் காத்திருந்தனர்

மேலும் காடுசெட்டிப் பட்டி வனப்பகுதியில் மிக குறுகிய வளைவு கொண்ட பகுதி என்பதாலும் இரயிலின் இஞ்சின் பகுதியில் உள்ள முன் சக்கரத்தில் உள்ள பக்கவாட்டு தகடு கழன்று விமுந்ததாலும் எஞ்சின் பகுதியின் முன்பக்கம்  இருந்த இரண்டு சக்கரமும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது இதனையறிந்த இரயில் ஓட்டுனர் சிங் சமயோசிதமாக இரயிலின் வேகத்தை படிப்படியாக குறைத்து இரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.சம்பவம் அறிந்து உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு ரயிலை கொன்டு சென்றனர்,தண்டவாளம் சீர் செய்யும் பொருட்டு தற்காலி இவ்வழியாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது மேலும் இந்த விபத்து குறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!