14
இலங்கையில் 19/4/19ல் ஏற்பட்ட தொடர் வெடிகுண்டு சம்பவத்தால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் தீவு கிறிஸ்தவ அமைப்பு, மீனவ குடும்பங்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சுமார் ஒரு கி.மீ., தூரம் அமைதி பேரணி நடைபெற்றது.
பேரணி நிறைவில் உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடையவும், உலகில் அமைதி வேண்டியும் கூட்டு பிராத்தனை நடைபெற்றது. இப்பேரணியில் அனைத்து சமுதாயங்களைச்சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.