-திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை தாலுகா நாட்டாா்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் முத்தையா தலைமையில் கொடியேற்றி நிகழ்ச்சியும் மற்றும் உறுப்பினர் சோ்கை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது :
மக்களிடையே நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை விதிமுறைகளை தெளிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் கிருஷ்னகுமாா், அறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் அழகுமணி ,மாவட்ட பொது செயலாளர் முத்து ராமலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், கனகராஜ், கருணாநிதி,ஒன்றிய தலைவர் குமாா், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் சி.கே.ராஜா கட்சியின் உறுப்பினர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்..
You must be logged in to post a comment.