இராமநாதபுரத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தெரிவிக்கையில் :- இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் என தலைமையில் சிறப்பு மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது இந்த பொதுக்குழுவில் இராமநாதபுரம் மேற்கு, இராமநாதபுரம் கிழக்கு, திருவாடானை சட்டமன்ற தொகுதிகள் செயல்பட்டு வந்த நிலையில் நிர்வாக வசதிக்காக பொதுக்குழு ஒப்புதலோடு அவைகள் கலைக்கப்பட்டு ஒன்றியங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளராக பீர் முகைதீன், திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளராக ராஜ்குமார், இராமநாதபுரம் ஒன்றிய செயலாளராக அக்பர் அலி ,மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளராக முகமது சுலைமான் ,மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளராக முகமது சிராஜ்தீன் ,திருவாடானை ஒன்றியம் செயலாளராக அப்துல் மஜீத் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளர். .
38
You must be logged in to post a comment.