12
நெல்லையிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே 10.10.2019 முதல் 07.12.2019 வரை ரயில் எண் 12631/12632 சென்னை – திருநெல்வேலி, சென்னை -நெல்லை எக்ஸ்பிரஸ், சென்னை – செங்கோட்டை – சென்னை-பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.