குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட மாணவ- மாணவிகள் கலந்துக் கொள்ளலாம். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.போட்டிக்கான தலைப்புக்கள் பின்வருமாறு:
1-2 ஆம் வகுப்பு – மலரும் இலையும், 3-4 ஆம் வகுப்பு – இயற்கைக் காட்சி, 5-6 ஆம் வகுப்பு – மழை நீர் சேகரிப்பு, 7-8 ஆம் வகுப்பு-கொரானா விழிப்புணர்வு ஓவியம், மாணவர்கள் A4 அளவு வரைப்பட தாளில் வரைந்து, தங்கள் படைப்புக்களை 17.11.2020 மாலை 5 மணிக்கு முன்பாக நெல்லை அருங்காட்சியகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம்.
வரைபட தாளின் பின்புறம் தங்களின் பெயர், வகுப்பு, முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் எழுதி அனுப்பவும்.தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி : காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், எஸ்.பி அலுவலகம் அருகில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் 19/11/2020 அன்று அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும். கலந்து கொள்ளும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தை 9444973246 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி அவர்கள் தெரிவித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.