Home செய்திகள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும்-தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும்-தெற்கு ரயில்வே அறிவிப்பு

by mohan

பொதிகை எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முதல் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால், சென்னை எழும்பூரிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் அக்டோபர் 10ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை சென்னை எழும்பூர் இருந்து இயக்கப்படாது என முன்னதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள், குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 7ம் தேதிக்கு முன்னதாகவே முடிவடைவதால், நாளை முதல் (03.12.2019) செங்கோட்டையிருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் மற்றும் திருநெல்வேலியிருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை எழும்பூர் வரை செல்லும்.அதே போல் நாளை மறுநாள் முதல் (04.12.2019) பொதிகை எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல் சென்னை எழும்பூரிருந்து புறப்பட்டு செங்கோட்டை மற்றும் திருநெல்வேலி செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!