13
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, பழனி ஆயுதப்படை காவலரான மணிமுத்து மழைநீர் சேகரிப்பு மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக 17.11.2019-ம் தேதியன்று வத்திராயிருப்பு – அழகாபுரி சாலையில் கண்களை துணியால் கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடினார்.20 நிமிடம் 12 வினாடியில் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடியதையடுத்து, இது உலக சாதனையாக பதிவாகியுள்ளது.நோபல் வேர்ல்டு ரெகார்டு குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்ததுடன், இச்சாதனையை அங்கீகரித்து சான்றிதழையும் வழங்கினர்.காவலரின் இச்சாதனை குறித்த செய்தி சமூக வளைதளத்தில் பரவி பொதுமக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.