சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் முதலியார் பட்டி அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்,, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் புதிய இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, துணைத் தலைவர் பாசுல் அஷ்ரப், எஸ்எம்சி தலைவி ஜன்னத், விஜயலஷ்மி, வார்டு உறுப்பினர் காலித் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முத்துராஜா வரவேற்புரை வழங்கினர். திமுக மாவட்ட பிரதிநிதி முகமது யாக்கூப், தென்பொதிகை வியாபாரிகள் சங்க துணை தலைவர் பழக்கடை சுலைமான், ஊராட்சி மன்ற தலைவி முகைதீன் பீவி அசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல்காதர் புதிய இருக்கைகளை வழங்கி, தேர்வுக்கு எப்படி மாணாக்கர்கள் தயாராக வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார். ஆசிரியை ஆஷாராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதலியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியைகள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பில், 10 இருக்கைகள், முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.