மதுரை மாவட்டம் மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்இதனால் தமிழகம் முழுவதும் கறிக்கோழிகள் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் மேலும் இதனை நம்பியுள்ள சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஆகையால் தமிழக முதல்வர் உடனடியாக எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்டத்தில் உள்ள கறிக்கோழி வளர்ப்போர் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் அவர்களை நேரி ல் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்மேலும் இது சம்பந்தமாக கறிக்கோழி வளர்ப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறும்போது.மதுரை மாவட்டம் மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச் சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து கடந்த 4ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்எங்கள் சங்கத்தில். பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு 47 கம்பெனிகள் சுமார் இரண்டு லட்சம் குடும்பங்கள் உள்ளனஇந்தத் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் வாழ்வாதாரம் இழக்க காரணமாக உள்ளனஎன்றும் ஆகையால்.தமிழக முதல்வர் உடனே தலையிட்டு எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற.ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.மேலும் கம்பெனிகள் கோழிப்பண்ணை தொழிலில் ஒப்பந்த அடிப்படையில் 45 நாட்களுக்கு கோழிகளை வளர்த்து கொடுத்தால் கிலோவிற்கு ஆறு ரூபாய் ஐம்பது பைசா என்று நிர்ணயித்து உள்ளன.தற்போது உள்ள விலைவாசி மற்றும் வேலையாட்கள் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சூழல் காரணமாக கறிக்கோழி வளர்ப்பு தொழில்.மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வருகிறதுஅதனை கருத்தில் கொண்டு . 45 நாள் கோழிகளை வளர்த்து கொடுத்தால் கிலோ ஒன்றுக்கு 15 வீதம் கம்பெனிகள் எங்களுக்குவழங்க வேண்டும் என்றும்எங்கள் கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வைத்துள்ளோம் இது சம்பந்தமான மனுவினை மாண்புமிகு தமிழக வணிகவரி பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் மலைக்கு வில்லாபுரம் உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறி உள்ளார் என்று தெரிவித்தனர்இந்த நிகழ்ச்சியில்.சங்க ஆலோசகர் விக்ரமங்கலத்தைச் சேர்ந்தஉல்லாசம் பால்பாண்டி அவர்களின் தலைமையில் கஜேந்திரா குரூப் கண்ணன், தலைவர் அருண் பிரசாத், செயலாளர் மாயழகன், பொருளாளர் ராமதாஸ், மற்றும் நிர்வாகிகள் ரமேஷ், கணேஷ், முருகன் ,ரமேஷ் கணேசன் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.