Home செய்திகள் வீரசிகாமணி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

வீரசிகாமணி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

by mohan

தென்காசி மாவட்டத்தில் புதிய மதுபானக்கடை (டாஸ்மாக்) திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சிக்குட்பட்ட அருணாசலபுரம் பகுதியிலிருந்து வீரசிகாமணி செல்லும் சாலையில் புதிய மதுக்கடை (டாஸ்மாக்) திறப்பதை கண்டித்து வீரசிகாமணி, அருணாசலபுரம் அரியநாயகிபுரம், மீனாட்சிபுரம், வடநத்தம்பட்டி சுற்று வட்டார பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள்,ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீரசிகாமணி விலக்கு பகுதியில் நடந்த இந்த கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் விசிக மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை, தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள், பெண்கள், பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். திறக்காதே! திறக்காதே! மதுக்கடையை திறக்காதே! என்பது உள்ளிட்ட மதுக்கடைக்கு எதிரான கண்டன கோஷங்களை முழங்கினர். மதுக்கடைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை, தென்காசி மாவட்டச் செயலாளர்கள் டேனி அருள்சிங் மற்றும் நிர்வாகிகள் குழந்தை வள்ளுவன் மற்றும் நிர்வாகிகள், இ.எ.பா மாநில துணைச் செயலாளர் எம்.சி. கார்த்திக், சுரண்டை பாக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள், வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆ.லிங்கவளவன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மா.காசி சிவகுருநாதன், கிறிஸ்தவ சமூகநீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளர் வே. புஷ்பராஜ், இ.எ.பா ஒன்றிய அமைப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன், சங்கரன்கோவில் ஒன்றியச் செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் வீரசிகாமணி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம் வடநத்தம்பட்டி, மீனாட்சிபுரம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!