Home செய்திகள் மதுரை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடம் பெற்றவர்களுக்கு விற்பனை பத்திரம் ஒப்படைப்பு முகாம்.

மதுரை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடம் பெற்றவர்களுக்கு விற்பனை பத்திரம் ஒப்படைப்பு முகாம்.

by mohan

மதுரை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மதுரை தோப்பூர், உச்சப்பட்டி துணைக்கோள் நகரம், மற்றும் 4 மாவட்டங்களில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு இடத்துக்குரிய விற்பனை பத்திரம் ஒப்படைக்கப்பட்டன.மதுரை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தோப்பூர், உச்சப்பட்டி, துணைக்கோள் நகரம், மற்றும் 4 மாவட்டங்களில் உள்ள வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான பகுதிகளில் பொதுமக்களுக்கு,இடம் விற்பனைக்கான ஏலம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் குலுக்கல் மூலம் இடம் கிடைத்தவர்கள் பணம் கட்டி முடித்தவுடன் அவர்களுக்குரிய விற்பனை பத்திரங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வீட்டுவசதி வாரியம் அலுவலகத்தில் வைத்து விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.இதற்காக ஆகஸ்ட் 24, 25, 26, ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்ட டது. முகாமில் 400 க்கும் அதிகமானவர்களுக்கு விற்பனை பத்திரங்களை மேற்பார்வை பொறியாளர் தியாகராஜன் செயற்பொறியாளர்கள் அன்புமணி இருளப்பன், ஒதுக்கீடு சேவை மேலாளர்கள் கபீர் அகமது ராஜேஸ்வரி, ஆகியோர் வழங்கினர்.முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி வருவாய் அலுவலர் முகமது இப்ராஹிம், மதுரை வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் கண்ணன், கண்காணிப்பாளர்கள் சாதிக் பாட்ஷா, ராஜேந்திரன், பொன்ராஜ், தலைமை நில அளவையாளர் அன்பு கண்ணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com