11
மதுரை மாவட்டம் NP கோட்டையைச் சேர்ந்த கண்ணன்(40). லாரி டிரைவர். இவரது மனைவி, முத்துலட்சுமி(35). இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்தில் 2011ல் முத்துலட்சுமி புகார் கொடுக்கச் சென்றார். அதை கண்டித்து மனைவியை கண்ணன் கொலை செய்தார். அவர் மீது சமயநல்லூர் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் கொலை வழக்கில் வழக்குப்பதிவு செய்து மதுரை மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் சமயநல்லூர் போலீசார் வழக்கை வெற்றிகரமாக நடத்தி கண்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் பெற்றுக் கொடுத்தனர். இதை அறிந்த மக்கள் போலீசாரை வெகுவாகப் பாராட்டினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.