லோட்டஸுடன் இணைந்துஜே.சி.ஐ மதுரை சென்ட்ரல் ஹோட்டல் லோட்டஸுடன் இணைந்து ஜெய்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஹோட்டல் லோட்டஸ் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், சேதுபதி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிலருக்கு கோவிட் 19 நோய் தடுப்பூசி முகாம் சேதுபதி பள்ளியில் நடைபெற்றது
JC.Prathap sethu உடனடி முன்னாள் மண்டலத் தலைவர், மண்டலம் 18, JCI இந்தியா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக ஜே.சி.ஐ மதுரை சென்ட்ரலின் முன்னாள் தலைவர் ஜே.சி.முருகன் கலந்து கொண்டார். JCI மதுரை சென்ட்ரலின் தலைவர் Jc.HGF.L.DEEPAK முதன்மை விருந்தினர், கௌரவ விருந்தினர் மற்றும் அரசு மருத்துவ குழுவை கவுரவித்தார். தடுப்பூசிகளை அனுமதித்து வழங்கியமைக்காக கமிஷனர், துணை ஆணையர் மற்றும் மதுரை மாநகராட்சி தலைமை சுகாதார அதிகாரி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். முகாமில் 745 பேர் தடுப்பூசி போட்டனர். ஒரு சமூகப் பொறுப்பாக கோவிட் 19 முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.