10
கொரானா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் கிராமங்களுக்கு சுகாதாரத்துறை சார்பாக கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகங்கள் வழங்கபட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மதுரைமாவட்டம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளந்திரி கிராமத்தில்பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.