Home செய்திகள் மதுரை -விமானத்தில் வான்வெளியில் நடைபெற்ற சொகுசு திருமணம் குறித்து விசாரணை செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை -விமானத்தில் வான்வெளியில் நடைபெற்ற சொகுசு திருமணம் குறித்து விசாரணை செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

by mohan

மதுரை விமான நிலையத்தில் புறப்பட்ட விமானத்தில் வான்வெளியில் நடைபெற்ற சொகுசு திருமணம் குறித்து விசாரணை செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் மேலும் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் இருந்துபுறப்பட்ட விமானத்தில் நேற்று மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் மகன் ராகேஷ் மற்றும் சக்க்ஷிதா திருமணம் நடைபெற்றது.

இதில் மதுரையில் இருந்து புறப்பட்ட விமானம் தூத்துக்குடி செல்லும் வான்வெளியில் திருமணம் நடைபெற்றது .இது குறித்து சமூக வலைதளங்களில் மற்றும் செய்திகளில் பரபரப்பான செய்திகளை தொடர்ந்து வந்தது.கரோன காலங்களில் இத்தகைய திருமணம் நடைபெற அனுமதி அளித்தது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் மதுரை விமான நிலைய இயக்குனர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவன மேலாளர் மகேஷ் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் கடிதம் அனுப்பியுள்ளார்.இது குறித்து மத்திய விமான போக்கு வரத்து துறை அமைச்சகம் விமான நிறுவனத்திற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com