Home செய்திகள் இராஜபாளையம் பகுதியில் சமூக இடைவெளி இல்லாத கடைக்கு சீல் மற்றும் அபராதம் விதித்த நகராட்சி ஆணையாளர்.

இராஜபாளையம் பகுதியில் சமூக இடைவெளி இல்லாத கடைக்கு சீல் மற்றும் அபராதம் விதித்த நகராட்சி ஆணையாளர்.

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் தற்போது ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் வெளியில் அதிகமாக காணப்பட்டதுஇதையடுத்து நகராட்சி ஆணையாளர் சுந்தரம்பாள் தலைமையிலான அதிகாரிகள் இராஜபாளையம் தனியார் சந்தையில் ஆய்வு செய்தனர். கொரோணா ஊரடங்கு விதிமுறை மீறி திறக்கப்பட்ட அத்தியாவசமற்ற கடைகளுக்கு நகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் முன்னிலையில் 3 கடைகள் பூட்டி சீல் வைத்தனர்.மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனவும், கடையின் வாடிக்கையாளர் முக கவசம் அணியாமல் இருப்பது, கை கழுவும் கிருமி நாசினி மருந்து இல்லாமல் இருந்த கடை வியாபாரிகளுக்கு ரூபாய் 13 ஆயிரம் வரை நகராட்சி ஆணையாளர் அபராதம் விதித்தார்.மேலும் கொரோணா தொற்று குறித்து விழிப்புணர்வு ஆலோசனை வழங்குவதாக நகராட்சி ஆணையாளர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் 70 வியாபாரிகளை சமூக இடைவெளி இல்லாமல் நிற்க வைத்து ஆலோசனை வழங்கினர். மக்களுக்கு முன்னுதரமாக இருக்கும் அரசு அதிகாரிகள் பொதுவெளியில் பாதுகாப்பற்ற முறையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியது நோய் தொற்று பரவும் சூழல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com