விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலை மாயூரநாதசுவாமி கோவில் எதிரில் திரௌபதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் (குருசாமி மகன்) மாரியப்பன் (வயது 51) மற்றும் அவரது நண்பர் அழிசோடைதேவர் மகன் முருக கணேஷ் (வயது 50) இவர்கள் இருவரும் உறவினர் ஒருவர் இறந்த நிலையில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மயானத்திற்க்கு இருசக்கர வாகனத்தில் இவரும் சென்ற போது ராஜபாளையம் R56 பால் கூட்டுறவு சங்கத்திற்க்கு சொந்தமான பால் ஏற்றிச் செல்லும் வேன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் பால் டிப்போவில் பால் இறக்கி விட்டு திரும்பி வரும்பொழுது இரு சக்கர வாகனம் மீது மோதியதில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இவரது நண்பர் முருக கணேஷ் பலத்த காயங்களுடன் இராஜபாளையம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றபோது விபத்தில் பலியானதால்அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேலும் விபத்து குறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.