15
மதுரை சம்மட்டிபுரம் எச்.எம்.எஸ் காலனியை சேர்ந்தவர் வெண்ணிலா 40.இவர் டிவிஎஸ் நகர் ரயில்வே பாலம் அடியில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக வெண்ணிலா சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில் தங்கள் பகுதியில் வசிக்கும் இரண்டு நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.