Home செய்திகள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மூச்சுத் திணறி பலி.

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மூச்சுத் திணறி பலி.

by mohan

மதுரை அவனியாபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.மதுரை அவனியாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது 9 மாத மகன் மித்ரன். இவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். அவனைஉடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனில்லாமல் சிறுவன் மித்ரன் பரிதாபமாக உயிரிழந்தான் . இதுகுறித்து அப்பா மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!