12
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் 12 ம் தேதி துவங்கி தற்போது தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் எதிர்க்கட்சி சின்னங்களை அழித்து பணியில் ஈடுபட்டனர்.ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக விரகனூர் ரிங் ரோடு, புளியங்குளம், சிலைமான் பகுதிகளில் வரையப்பட்ட இரட்டை இலை சின்னங்களை வரைந்துள்ளனர்.இதுகுறித்து தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர.அரசு கவர்களில் ஆளுங்கட்சியினர் வரைந்த ” இரட்டை இலை” சின்னத்தை அளிக்காமல் அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.