38
மதுரை மாவட்டம் சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் மாஸ்டர் சசிகுமார் கராத்தே பயிற்சிகள் வழங்கிவருகிறார் .இவரிடம் சோழவந்தான், மட்டப்பாறை, தேனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்குபெற்று முதல் பரிசை தட்டிச் சென்றனர். மாணவர்கள் அர்ஜுன் விஷ்ணு முதலிடமும், வசீகரன் ,சர்மன், கிஷோர், பாவனா, வைஷ்ணவி, தனுசியா, அப்துல் ரஷீத், சர்மன் ஆகியோர் மூன்றாமிடம் பெற்றனர் இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும் கோப்பையும் வழங்கப்பட்டது பரிசு பெற்ற மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் பாராட்டினர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.