Home செய்திகள் திருப்பரங்குன்றம் அருகே இரயில் மோதி பெண் பலி.

திருப்பரங்குன்றம் அருகே இரயில் மோதி பெண் பலி.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் – திருமங்கலம் இடையே கூத்தியார்குண்டு ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை ரயில்வே போலீசார் பெண் சடலத்தை மீட்டு புகைப்படத்தை வைத்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதில் ரயிலில் அடிபட்டு இறந்தவர் கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்த வீரலட்சுமி (55) என்பது தெரியவந்தது.இதையடுத்து அப்பெண்ணின் சடலத்லை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுரை இரும்புப் பாதை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com